Monday 13 February 2012

யாரையும் நோகாத கனவுகள்..

 

வலிக்காமல்

சலிக்காமல்

நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்

நிஜம் பூத்த மலர்களின் -

வாசம்தொடும்,

வரலாறாய் மட்டும் மிகாமலும்,

முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த

பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் -

மல்லிகைப் பூக்க,

ஒற்றை நிலாத் தெரிய,

மரம் செடி கொடிகளின் அசைவில் -

சுகந்தக் காற்று வீசும் -

தென்றல் பொழுதுகளுக்கிடையே

வஞ்சனையின்றி -

உயிர்கள் அனைத்தும் வாழ

யாரையும் நோகாமல் ஒரு – கனவேனும் வேண்டும்!!

No comments:

Post a Comment

Popular Posts