Sunday 12 February 2012

பூங்காற்று ...

 
 
 



வல்லரசுகள் இரண்டும்
மோதிகொண்டும்
கூட்டணி சேர்ந்துகொண்டும்
இடியும் மின்னலும் இல்லறத்திலேயே

வீட்டில் ஒளி தரும் தீபங்களோ
நிம்மதி விளக்கினை
அணைக்கும் முயற்சியிலே
அடக்கும் முயற்சியில் மாமியார்களும்
சுதந்திரம் பேசிக்கொண்டே மருமகள்களும்
தன் இளமை பருவம் மறந்த பெரியவர்கள்
தன் தாயின் முதுமையை மறந்த சிறியவர்கள்

தலைமுறை தலைமுறையாய்
தொடரும் குடும்ப பூகம்பங்கள்
மகளாய் மருமகளையும் தாயாய் மாமியாரையும்
எண்ணும் இல்லத்திலே என்றும் வீசுமே
மணமுள்ள பூங்காற்று ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

No comments:

Post a Comment

Popular Posts