Tuesday 14 February 2012

விழிகளே ....

 
 





எனது விழிகளே
பலமுறை வேண்டியும்
பயனில்லை உங்களிடம்
மனதின் மர்மங்களை
அம்பலபடுத்தும் ஆயுதங்களே
அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை உள்ளுக்குள்
வையுங்கள் ..

நான் காதலில் தோற்கவில்லை
கவலைகள் எனக்கில்லை
பயம் என்பது என்னில் இல்லை
பகைமையோ எனக்குள் இல்லை
பிரிவுகள் கருதி கலங்குவதுமில்லை
இத்தனையும் காட்டாது
இமை மூடி கொள்ளுங்கள் ..
வலிகள் பலவகை வருவினும்
விழிநீர் வடிக்காதீர்கள்
விசும்பலுடன் விண்ணபிக்கிறேன்
எனது விழிகளே ...
~அன்புடன் யசோதா காந்த் ~

No comments:

Post a Comment

Popular Posts