Thursday 9 May 2013

ஒற்றைத் தலைவலிக்கு மருந்து செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்



செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார்.

அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும்.



இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை.

நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார்.


ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார்.
வேலை முடிந்து டாக்டர் தன் வீட்டுக்குப் போனார்.

 வீடு திறந்திருந்தது. பெட்ரூமில் இருந்து சத்தம் வரவே எட்டிப்பார்த்தார். அங்கே எக்ஸ் உடன் டாக்டரின் மனைவி உல்லாசமாக இருந்தார்.

அதைப் பார்த்த டாக்டர் கோபத்துடன், என்ன நடக்குது இங்கே என்று கத்தினார்.
உடனே மிஸ்டர் எக்ஸ் கூலாக, நீங்கதானே டாக்டர் தலைவலி வந்தா மனைவி கிட்ட போக சொன்னீங்க என்றார்.


அதற்கு டாக்டர், நான் உன் மனைவியிடம் தானே போகச் சொன்னேன். என் மனைவியிடம் ஏன் வந்தாய் என்றார்.

அதற்கு எக்ஸ், எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்று கூறினான்.

இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியோ, அதான் இப்பல்லாம் உங்களுக்கு தலைவலியே வர்றதில்லையே, உங்ககிட்ட வர்ற நோயாளிகளையாவது என்கிட்ட அனுப்புங்களேன் என்று கூறவே செய்வதறியாது விழித்தார் டாக்டர்.

Popular Posts