Monday 13 February 2012

இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!


அந்த மின்னலின் வேகத்தில்

இதய சொந்தமானவளே,

சொக்கும் விழிப் பார்வையின்றி

மனதால் சொக்குப் பொடி போட்டவளே;

மிச்சமுள்ள ஆசைகளில்

மொத்தமாய் பூத்தவளே,

மூன்று கடல் தாண்டி நின்றும்

காதலால் இதயத்தில் அறைந்தவளே;

காலதவம் பூண்டெழுந்து

பரிசிட்ட பெண்விளக்கே,

கவிதை நெருப்பென பொங்கி

இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;

மூச்சுக்கு முன்னொரு முறையேனும்

சுவாசத்தில் வசிப்பவளே,

எனக்கு இதய வாசல் கதவு திறக்க

இணையத்தில் வந்தவளே;

நட்புக்கு சக்கரை போட்டு

காதலாய் திரித்தவளே,

கெட்டுப் போகாத உன் குணத்தால

மனசெல்லாம் கெடுத்தவளே;

குண்டு குண்டு கண்ணாலே

மின்னஞ்சலில் படமனுப்பி மிரட்டியவளே,

யாரும் விரட்டாத அன்பெடுத்து

கைகோர்க்கத் துடிப்பவளே;

கற்கண்டு தேனாட்டம்

கனவு கூட இனிக்குதடி,

நீ கூடி வாழும் நாளுக்குத் தான்

வாழ்க்கை சொர்க்கமாய் கனக்குது;

மாலை மாத்தும் நாலு இதோ

இப்போ கூட போகுதேடி,

இனிமேலும் தயக்கமென்ன

ஓடிவந்து கட்டிக்கடி!! உயிரெல்லாம் பூத்துக்கடி!

No comments:

Post a Comment

Popular Posts