Thursday 16 February 2012

உன்னை விட நான் அழகில்லை….?


கார் மேகமும்

கரும நிற – உன்

கூந்தலை கண்டு

காரணமில்லாமல் களைந்து

போகும்….!

சுட்டெரிக்கும் சூரியனும்

சுட்டு விழி – உன்

பார்வையை கண்டு

சுருண்டு சுருண்டு

குளிர்த்து போகும்…!

வெட்ட வெளி வெண்ணிலவும்

வெகிளி தனமுள்ள – உன்

அழகை கண்டு

வெளுத்து போகும்….!

ஏழு வர்ணம் பூசிய வானவிலும்

ஒரு வர்ணம் உள்ள – உன்

புருவத்தை கண்டு

தனித் தனியே பிரிந்து போகும்….!

பறந்து திரியும் பட்டாம் பூச்சியும்

திறந்து மூடும் – உன்

இமையை கண்டு திசை

தெரியாமல் தொலைந்து போகும்….!

பூத்து குலுங்கும் பூக்களும்

புதியதாய் பூத்த – உன்

புன்னகையை கண்டு

எகிறி குதித்து

புதைந்து போகும்…!

அலைந்து அலைந்து அடிக்கும் கடலையும்

ஒளிந்து இருக்கும் – உன்

வெட்கத்தை கண்டு

உறைந்து உறைந்து

வற்றி போகும்…!

விஸ்வருபம் எடுக்கும் புயலும்

மௌனங்கள் வெடுக்கும் – உன்

வார்த்தையை கண்டு

மெது மெதுவாய்

அடங்கி போகும்…!

வளைந்து நெளிந்த வயல் வெளியும்

அசைந்து பிசைந்த – உன்

இடையை கண்டு

சரிந்து சரிந்து

செத்துப் போகும்…!

படர்ந்து விரிந்த புல்வெளியும்

நடந்து சென்ற – உன்

பாத சுவற்றை கண்டு

சட்டென்று பட்டுப் போகும்…!

No comments:

Post a Comment

Popular Posts