Friday 2 March 2012

பள்ளிக்கூடம் ....

 
 
 



இவளும் நம் தாயல்லவா
தாயவள் கருவறையில்
நமக்கு உருவம் கொடுபாள்

பள்ளிக்கூட வகுப்பறையோ
நம் வாழ்வுக்கு வழி திறப்பாள்

குயவனின் கைபட்ட களிமண்ணோ
சிறப்புமிக்க பொருளாகும்

பள்ளிகூடமோ நம்மை
மாண்புமிகு மனிதர்களாக்கும்

மனிதனை மனிதனாக்குவதும்
பள்ளிக்கூடமே

பட்டங்களும் பதவிகளும் தந்து
சரித்திரம் படைக்க வைக்குமே

அறிவு எனும் கண்ணைதிறந்து
கல்விதரும் பள்ளிக்கூடமும்
நமது கருவறையே ..

~அன்புடன் யசோதா காந்த் ~

 

No comments:

Post a Comment

Popular Posts