Wednesday 29 February 2012

வயிற்றைக் கேள்!

 
எங்கோ படித்த கவிதை
படித்தவுடன் மனதில் பதிந்த கவிதை
சராசரி மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் கவிதை
என்னைத் நான் தன்மதிப்பீடு செய்துகொள்ளத் துணைநிற்கும் கவிதை.
வாழ்க்கையின் உயர்வை மிக அழகாக, ஆழமாக, நயமாக,நறுக்கென்று சொல்லும் கவிதை..

நானறியாத கவிஞராக இவர் இருந்தாலும் , எனக்குள் இருக்கும் நான் யார் என்பதை எனக்கு உணர்த்திய அக்கவிஞருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு அக்கவிதையை உங்கள் முன்வைக்கிறேன்.






தலையைச் சொறி
நாக்கைக் கடி
பல்லை இளி
முதுகை வளை
கையைக் கட்டு
காலைச் சேர்
என்ன இது
வயிற்றைக் கேள்
சொல்லுமது
 
தொடர்புடைய இடுகைகள்

No comments:

Post a Comment

Popular Posts