Tuesday 28 February 2012

வலி .....







 


நாட்களும் நொடிகளும்
நகர மறுப்பதேன் ?

உண்ணாமல் ...நீர் அருந்தாமல் இருந்தும்
பசிப்பதில்லையே ஏன் ?

உறவெல்லாம் உடன் இருந்தும்
தனிமை என்னை தழுவியதேன்?

இதய துடிப்பு சீராய் இருந்தும்
உடலும் மனமும் உயிரற்று இருப்பதேன்?

வாழ்க்கையில் மற்ற ஒன்றிலும்
தேடல் இல்லையே ஏன்?

கத்தியின்றி காயம்இன்றி
வலிகள் ஏன்?

காதலெனும் நோயினால்
உடலும் மனமும் உருக்குலைந்து போவதேன் ?

பெரும் பிணிக்கெல்லாம் தீர்வு உண்டே
காதல் நோய்க்கு மருந்து இல்லையே ஏன் ?

ஏன் ஏன் ஏன் என்று
மனம் மருகி உருகி தவிப்பதேன் ?

~அன்புடன் யசோதா காந்த் ~

No comments:

Post a Comment

Popular Posts