Saturday 5 January 2013

தமிழ் சுவாசம்

ஒரு காகிதம்
ஒரு எழுதுகோல்
என் தமிழ் நீ
என்னோடு இருந்தால் போதும்
எப்போதும் சுகமாய் வாழ்வேன்!
-
தமிழே!
என் இனிய கனவுகள் இதோ!
எங்கே? யாரோ? கண்டறிந்ததை
நாம் படித்தது போதும்
இனி நாம் கண்டறிவதை
உலகெலாம் படிக்கச் செய்வோம்!
-
நம் வீட்டு அலமாரியில்
ஷேக்ஸ்பியர் புத்தகம்
இருப்பது போல்
மேற்கத்திய வீட்டு அலமாரியில்
திருக்குறள் புத்தகம் இருக்கட்டும்!
-
எப்போதாவது
ஆங்கலப் பாடல்களை நாம்
முணுமுணுப்பது போல்
பாரதி பாடல்கள்
மேற்கத்தியன் முணுமுணுக்கட்டும்!
-
வெடித்த பூமிக்கு வியர்வை கொண்டு
தாகம் போக்கும் தமிழ் விவசாயியின்
கிராமியப் பாடல்கள்
மேற்கத்திய வீட்டு
குளு குளு அறையின்
ஒலி நாடாக் கருவியில்
ஒலிக்கட்டும்!
-
‘மம்மி’கள் நிறைந்த
எகிப்து முதல்
‘கும்மி’கள் நிறைந்த
அமெரிக்கா வரை
மேறகத்திய குழந்தைகள்
பெற்றவளை ‘அம்மா’
என்றே அழைக்கட்டும்!
-
புதிய தமிழ்தேசம் படைப்போம்
பூமிக்கெல்லாஈம்
தமிழ் வாசம் கொடுப்போம்!

No comments:

Post a Comment

Popular Posts