Friday 4 January 2013

உழவின்றி உலகில்லை...!!

(பொங்கல் கவிதை போட்டி) 

எங்கெங்கு காணினும் உழவு என்றொரு காலம்,
செங்குருதி வியர்வை சிந்தி ஏர் உழவு செய்து
உலகை சுழல வைத்தவன்
உழவன் எனும் தன்னலமற்ற இறைவன்..!!

பயிர்த்தொழில் மட்டுமே உயிர்தொழில்,
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு என
உயிரை உரமாக்கி உழவு செய்தவன் உழவன்..!!

ஆடிப்பட்டம் தேடி விதைத்து,
ஆவணியில் முளைப்பு பார்த்து,
எப்போதும் முப்போகம் தந்த பூமித்தாய்க்கு
உழவும்,உழவனும் செல்லபிள்ளைகளே..!!

வெண்கொற்றகுடை அரசனும்,
தங்க ஆடை தரித்த செல்வந்தனும்,
வீடு,பேறு என முற்றும் துறந்தவனும்,
உழவனின் உழவாட்சிக்கு அடிமையே..!!!

ஏரை நம்பி ஏட்டறிவை விட்டதாலோ என்னவோ,
தன் வியர்வையில் அறுவடை செய்து,
உயிரை கூறிட்டு உலகிற்கு சோறு போடுகிறான்..!!

அந்நியனுக்கு அடகு வைக்கப்படும் மனித அறிவு,
உழவனின் வியர்வைக்கும்,உழவுக்கும்
என்றுமே மண்டி இடும்..!!

உழவனின்றி அழகிய உழவில்லை,
உழவின்றி புதிய உலகில்லை..!!!

No comments:

Post a Comment

Popular Posts