Monday, 2 April 2012

சிரிப்பு வெடிகள்

 
 

வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!


ஜெயிலர் : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு

கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்



அப்பா : என்னம்மா சமையல் இது.
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.

மகள் : போதும் நிறுத்துங்கப்பா.
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்.



தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே.
எப்படி?
காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !!!
 
வயசுக்கு வ‌ந்த நடிகர் யாருன்னு தெரியுமா?
நீங்களே சொல்லுங்கப்பா
ஹி ஹி ஹி !!! மேஜர் சுந்தர்ராஜன்


போலீஸ் அடிச்ச அடியிலே
அவருக்கு பேச்சே வரலை ஏன்?
அடிச்ச அடியில் அவருக்கு ஊமைக்காயம் ஏற்பட்டுச்சாம்


கத்தி எடுத்து குத்தினதும் ரத்தம் ஏன் வேகமா வெளியவருதுன்னு தெரியுமா?
யாரு குத்தியதுன்னு பார்க்க வேகமா வெளியேவருது


ஹீரோயினுக்கு எதிர்ச்சொல் என்ன
ஹீரோ அவுட்


எஜூகேஷன் லோன் போட்டு படிக்கிற உங்க பையன்
இப்ப எப்படி படிக்கிறான்
கடனேன்னு படிக்கிறான்

Sunday, 1 April 2012

நிழல் தந்த மான்.

 
பள்ளிக் காலத்தில் தன் துணையான பெண்மானுக்குத் தன் நிழல்தந்தது ஆண்மான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு இலக்கியநயம் வியந்திருக்கிறேன்..

அந்தச் செய்தியை சங்க இலக்கியத்தில் கலித்தொகைப் பாடலில் கண்டு மகிழ்ந்தேன்.

இன்று குறுந்தொகையில் தன் கன்றுக்கு நிழல் தந்த ஆண்மான் பற்றிய செய்தியைக் கண்டு மகிழ்ந்தேன்.

இதோ அந்தப் பாடல்..

தலைவியை நீங்கிப் பொருள் தேடச் சென்றான் தலைவன். அவன் வழியில் காணும் காட்சிகள் அவனுக்குத் தன்னை நினைவுபடுத்தும் என எண்ணியிருந்த தலைவியிடம் தோழி பேசுவதாக இந்தப் பாடல் அமைகிறது.

 
நசை நன்கு உடையர் - தோழி - ஞெரேரென
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந்த ததரல்
ஒழியின் உண்டு அழிவு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன்மறிக்கு நிழல் ஆகி
நின்று வெயில் கழிக்கும் என்ப - தம்
இன்துயில் முனிநர் சென்ற ஆறே.
 
குறுந்தொகை -213


உன் தலைவர் உன் மீது மிகுந்த அன்புடையவர்தான் இருந்தாலும் பொருள் வாழ்க்கைக்குத் தேவை என்பதை உணர்ந்து உன்னை நீ்ங்கிப் பொருள் தேடச் சென்றுவிட்டார். அவர் சென்ற பாலை நிலம் பல்வேறு இன்பதுன்பங்களைக் கொண்டது.

நிழல் தரும் மான்.

தலைவர் சென்ற வழியில் அறிவுடைய ஆண்மான் தன் கன்றின் பசியைக் காணஇயலாமல் தன் கவைத்த கொம்புகளால் மரத்தின் அடிப்பகுதியைக் குத்தி, தன்னுடைய கன்றின் பசியைப் போக்கும்.
தன் கன்று உண்டு எஞ்சியதைத் தானும் உண்டு, தன் கன்று வெயிலின் வெம்மையைத் தாங்காது என்பதை உணர்ந்து, கன்றுக்கு நிழல் தருவதற்காக அசையாது அதன் அருகில் நின்று கன்றின் மேல் வெயில் படாமல் பகல் பொழுதைக் கழிக்கும்.

தலைவர் சென்ற வழி இத்தகையது என்கிறாள் தோழி.

ஆண்மான் தான் இருக்கும் இடத்தில் கிடைத்த உணவினைக் கன்றுக்குத் தந்து தானும் எஞ்சியதை உண்ணும் காட்சியைத் தலைவர் காண்பாராயின் பொருள் தேட எண்ணிய எண்ணத்தைக் கைவிட்டு இடையிலேயே திரும்புவாரோ என நினைத்தாள் தலைவி.

அவள் எண்ணத்தை இவ்வாறு மாற்றுகிறாள் தோழி.

உன் மீது தலைவனுக்கு இருக்கும் விருப்பத்தைவிட பொருளின் மீது அவன் கொண்ட விருப்பம் பெரிது என்று கூறித் தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைகிறது. இயற்கையோடு தம் வாழ்வியலை இயைபுபடுத்திப்பார்த்த சங்கத்தமிழரின் மாண்பு எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.



தொடர்புடைய இடுகைகள்

Monday, 26 March 2012

எனக்குப் பிடிக்காத ஒரே மதம்!

 

எல்லோருக்கும் பிடித்த மதம் தான்
உலகிலேயே பெரிய மதம் தான்
எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான்
எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான்
பரப்பாமலே பரவும் மதம் தான்
என்றாலும்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை!
ஆம் அந்த மதத்தின் பெயர்..
 
"கால தா மதம்"
 
எனக்குக் காக்கவைப்பதும் பிடிக்காது
காத்திருப்பதும் பிடிக்காது
அதனால் இந்த கால தா மதமும் பிடிக்காது!

தொடர்புடைய இடுகைகள்

Saturday, 24 March 2012

Friendship Can understand

 
 
 
Yuo konw waht is rael frndship?
Ex: just c tihs msg. Evry splleing of tihs msg is wrnog.
Bt sitl yuo can raed it withuot ayn mitsak.
Tis is frdsp!


Wednesday, 21 March 2012

Love proposing

 
 
A kutty boy proposing a kutty girl "ecchuse me,
do u have a band-aid? yen na I scrapd my muttikaal when I dapaknu felldown in kaadhal with u".


Tuesday, 20 March 2012

Love Sms

 

Show LOVE & CARE to all d people U meet in ur life.. So, wen someone asks u, "R u in LOVE?" Then u can proudly answer, "No LOVE is in me.."  Good night...

Is it a Boring night ???

 
 

If u feel life is boring. Don't worry.
Take a Coin & put toss.
If it is head,
Kupura paduthu thoongu.
If it is tail, Mallakka paduthu thoongu...
good Ni8...


Popular Posts