Friday, 16 March 2012

இறைவா தூக்கம் கொடு .....

 
 
 
 









இறைவா தூக்கம் கொடு ..

பணமே சிந்தனையாகி
தூக்கமின்மை

ஆரோக்கியம் நலன் கருதி
தூக்கமின்மை

உறவுகளின் பிரிவுகளால்
தூக்கமின்மை

மனம் நிறைந்த மகிழ்ச்சியால்
தூக்கமின்மை

காதலின் சுகங்களை அசைபோட்டு
தூக்கமின்மை

குழந்தைகளின் எதிர்காலம் கருதி
தூக்கமின்மை


கடன் தொல்லை தாங்காதே
தூக்கமின்மை
அடுத்தவர் உயற்சி கண்டு பொறாமையால்
தூக்கமின்மை

வயதாகி போனாலோ மரணம் நினைத்து
தூக்கமின்மை

தூங்காத விழிகள் ஆயிரமோ ???????????
இரவுகள் ஆயிரமோ .?????????????????.


~ அன்புடன் யசோதா காந்த் ~
 

No comments:

Post a Comment